சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் மாலா (45, பெயர் மாற்றப்பட்டள்ளது). இவரது மகள் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, கடந்த மே மாதம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்றபோது, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த மது கிரண் என்பவர், சிறுமியிடம் நட்பாக பழகி, செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். பின்னர், வாட்ஸ் அப் மூலம் சிறுமியிடம் பேசி வந்ததுடன், அவளது புகைப்படங்களையும் பெற்றுள்ளார். இதுபற்றி சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்ததால், சிறுமியை கண்டித்துள்ளனர்.