சண்டையை தடுத்ததால் 2 பேர் மண்டை உடைப்பு

போடி, ஜூன் 9: போடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் கட்டபொம்மன் சிலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது போடி கிழக்கு தெருவை சேர்ந்த சங்கர் என்ற தேவராத்தான், அஜித் பாண்டியன், பாசித் உள்பட நான்கு பேர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட மாரியப்பன், சண்டை போடாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை சரமாரியாக தாக்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹபிபுல்லா மகன் சபிபுல்லா(47) என்பவர், அவர்களிடமிருந்து மாரியப்பனை காப்பாற்றி அழைத்துச் சென்றார்.பின்னர் நான்கு பேரும் சேர்ந்து மாரியப்பனையும், சபிபுல்லாவையும் சராமரியாக தாக்கி மண்டையை உடைத்தனர். இதில் காயமடைந்த இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போடி நகர் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து 4 இளைஞர்களையும் தேடி வருகின்றார்.

Related Stories: