வீட்டை உடைத்து 8 பவுன் கொள்ளை

குஜிலியம்பாறை, ஜூன் 9: கர்நாடகா கேஜிஎப் கோலார் நகரை சேர்ந்தவர் முகுந்தன்(63). கரூர் பிச்சம்பட்டி தனியார் கிரானைட் கம்பெனி மேனேஜர். இவர் தனது மனைவி ஸ்டெர்லாவுடன் பாளையத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். மகன் மகேஷ் திருமணத்திற்கு துணிகள் வாங்க கடந்த ஜூன் 5ம் தேதி சேலத்திற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு இருவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 8 பவுன் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் பணம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து முகுந்தன் புகாரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: