திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவர் கையிலிருந்த பையை சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னமுத்து (25) என்பதும், அவர் அப்பகுதியில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சின்னமுத்துவை கைது செய்து அவரிடமிருந்த 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.