ஜி.ஹெச் வளாகத்தில் 2 ஆண் சடலம் மீட்பு

திருச்சி, ஜூன் 9: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு அருகே கடந்த 1ம் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து பணி மருத்துவர் பாலமுருகன் புகாரின் பேரில் மருத்துவமனை போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே கடந்த 4ம் தேதி சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: