நாகை அருகே துணிகரம்

கீழ்வேளூர், ஜூன் 9: நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த பொரவச்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (68) ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் கடந்த 2ம் தேதி இரவு தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: