பராமரிப்பு உதவித்தொகை பெறுவோர் உயிர் சான்றினை சமர்ப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்

விருதுநகர், ஜூன் 8: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்: பராமரிப்பு உதவித்தொகை பெறும் பயனாளிகள் 2022-23 ஆண்டிற்கான உயிர்சான்றினை அந்தந்த பகுதி விஏஓக்களிடம் உயிருடன் உள்ளார் என்ற உறுதிமொழி சான்று பெற்று 30.6.2022க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏப்.2022 முதல் ஏற்கனவே சமர்ப்பித்தவர்கள் வரத்தேவையில்லை. மாற்றுதிறனாளிகள் இறந்திருந்தால் அல்லது வேறு முகவரியில் அல்லது வேறு மாவட்டத்திற்கு குடி பெயர்ந்திருந்து இதுவரை தகவல் தெரிவிக்கதாவர்கள் பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும். உயிர்சான்று சமர்ப்பிக்கும் போது அதனுடன் தனித்துவ அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: