ஓட்டல் தொழிலாளியை ஓட, ஓட விரட்டி வெட்டிய கும்பல் உத்தமபாளையத்தில் பரபரப்பு

உத்தமபாளையம், ஜூன் 8:உத்தமபாளையத்தில் நள்ளிரவில் ஓட்டல் தொழிலாளியை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தமபாளையம்  வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் சுரேஷ்குமார் (33),   இவர் கம்பத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் வேலை செய்கிறார். தினமும் சதீஷ்குமார் பைக்கில் வேலைக்கு சென்று மீண்டும் நள்ளிரவில் ஊருக்கு திரும்புவது வழக்கம். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வேலைக்குச் சென்றுவிட்டு தனது பைக்கில் வந்தார். அப்போது பின்தொடர்ந்து,மற்றொரு பைக்கில் மர்ம நபர்கள் வந்துள்ளனர். உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனி அன்னபூர்னா ஸ்டோர் அருகே வந்தபோது, பின் தொடர்ந்து வந்தவர்கள், ஓட,ஓட விரட்டி அரிவாளால் சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த சுரேஷ்குமார் கீழே சாய்ந்தார்.உடனே அந்த மர்ம நபர்கள் தாங்கள் வந்த பைக்கை, அங்ேகயே போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார், பலத்த காயமடைந்த சுரேஷ்குமாரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்றும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை ேமற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: