நிலக்கோட்டை, ஜூன் 8: நிலக்கோட்டை அருகே ராமராஜபுரத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவின்பேரில் மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார் முயற்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன மாடர்ன் கலையரங்கம் அமைக்கப்பட்டது. இதனை பழநி எம்எல்ஏவும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன் (தெற்கு), சவுந்தரபாண்டியன் (வடக்கு), மட்டப்பாறை ஊராட்சி தலைவர் மகேந்திரன், நிலக்கோட்டை பேரூராட்சி துணை தலைவர் முருகன், பேரூர் செயலாளர் கதிரேசன், துணை செயலாளர் ஜோசப் கோயில் பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் செல்வி, அறிவு, தியாகு, ஒன்றிய துணை செயலாளர் வெள்ளிமலை, நிர்வாகிகள் இளங்கோவன், காதர் உள்ளிட்டோர் பங்கேற்றன