திண்டுக்கல், ஜூன் 8: திண்டுக்கல் தாமரைப்பாடி துணை மின்நிலையத்திற்குட்பட்ட உயரழுத்த மின் பாதையில் இன்று (ஜூன் 8, புதன்) சிறப்பு கூட்டு பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேல்வார்கோட்டை, புதுகளராம்பட்டி, பழைய களராம்பட்டி, கோவில்குளம் ,வி.செட்டியபட்டி, பெரியகோட்டை, வன்னியபட்டி, பில்லமநாயக்கன்பட்டி, கஸ்தூரிநாயக்கன்பட்டி, கோம்பையன்பட்டி பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. கன்னிவாடி துணை மின்நிலையத்தில் மின்பாதை பராமரிப்பு பணிக்காக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கன்னிவாடி, கீழதிப்பம்பட்டி, மணியகாரன்பட்டி, குரும்பபட்டி, தருமத்துப்பட்டி, குய்யவநாயக்கன்பட்டி, பழையகன்னிவாடி பகுதிகளில் மின்சப்ளை இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் சின்னக்காம்பட்டி துணை மின்நிலையம் மின்பாதையில் பராமரிப்பு பணிக்காக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பாறைப்பட்டி, அண்ணா நகர், அய்யம்பாளையம், எல்லப்பட்டி, ராயக்காவலசு, மார்க்கம்பட்டி, துறையூர், மாம்பாறை, கணவாய்பட்டி, கிருஷ்ணாபுரம், வடுகபட்டியில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நத்தம் எல்.வலையபட்டி உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணியால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெருமாள்பட்டி, பரளி- புதூர், வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, அழகாபுரி, கடம்பவனம் பகுதிகளில் மின்சப்பை நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.