கலெக்டர் பாராட்டு தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனை: 2 பேர் கைது
ஜெயங்கொண்டம், ஜூன் 8: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் எஸ்ஐ திருவேங்கடம் மற்றும் போலீசார் கடைவீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இடையார் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர்(45), உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜசேகர்(59) ஆகியோர் அவர்களது பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.