லாரி-மொபட் மோதல்:தொழிலாளி பலி

திருப்பூர், ஜூன் 8: திருப்பூர் பி.என்.ரோடு பூலுவபட்டி அடுத்த அம்மன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (43). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு அந்த பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியதில் பிரகாஷ் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: