சீர்காழி பெருமாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

சீர்காழி, ஜூன் 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். புகழ் பெற்ற இக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக தங்க கருட சேவை நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, தீபாராதனை நடந்தது. பின்னர் கோயிலின் நான்கு வீதிகளில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: