மலைவாழ் மக்கள் 124 பேருக்கு நில பட்டா

உடுமலை: தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்களுக்கு வனப்பட்டாவை  அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர்.தளி பேரூராட்சிக்கு உட்பட்ட குறுமலை, குழிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வனப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருமூர்த்திமலை கோயில் மண்டபத்தில் நேற்று நடந்தது.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, குறுமலையில் 9 பேருக்கும், குழிப்பட்டியில் 115 பேருக்கும் வனப் பட்டாக்களை வழங்கினர்.கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ., ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் புவியரசு, செந்தில்குமார், தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், துணைத்தலைவர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், துணை தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள்  மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: