ஆடு திருட முயன்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடியைச் சேர்ந்த ஆதிலட்சுமி தனது தோட்டத்தில் ஆடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இங்கு பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மேலாளராக உள்ளார். நேற்று தோட்டத்தில் ஆடு, கோழியை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இதைப் பார்த்த பாலகிருஷ்ணன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து தாலுகா போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து தாலுகா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதில், பிடிபட்டவர் சீலப்பாடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (36) என்பதும், ஆடு, கோழியை திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெள்ளைச்சாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: