எலி பேஸ்ட் சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

பண்ருட்டி, ஜூன் 6: பண்ருட்டி அருகே எல்.என்.புரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது இரண்டாவது மகன் கார்த்திக் இன்ஜினியரிங் முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று மாதத்திற்கு முன் தனது சொந்த கிராமத்திற்கு வந்து அவர் அங்கு சொந்தமாக பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதில் போதிய வருமானம் இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் கலாவதி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: