பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரி சத்யசாய் நகரை சேர்ந்தவர் பொன்ராஜ், தொழிலாளி. இவரது மனைவி முனிரத்தினம் (50), கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு, போக்கம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பொன்ராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து முனிரத்தினம் மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் வாட்ச் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: