விபத்தில் பிளஸ் 2 மாணவன் பலி

கடலூர், மே 28:கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சிலம்பரசன் (16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது தேர்வுகள் முடிந்த நிலையில் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டிதெரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிலம்பரசன் பலத்த படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் சிலம்பரசன் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் போதிய சிகிச்சை முறைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படாததே காரணமென கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலூர் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். தகவலறிந்து வந்த புதுநகர் போலீசார் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: