கோவை, மே 28: கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் அமிர்தராஜ் (33). எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர், பிரசவத்துக்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த அமிர்தராஜ் தனது மனைவியிடம் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.