ஈரோடு, மே 28: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அலுவலர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்குநர் சுரேஷ்குமார் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் பதிவு பெற்ற உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், ஜெருசலம் புனித பயணத்திற்கான நிதியுதவி, கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பார்த்தல், கல்வி உதவித் தொகை, டாம்கோ கடன் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.