கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, கோகுலம் காலனி, ராமர் தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (66). சென்னை வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 23ம் தேதி, ராணிப்பேட்டையில் உள்ள நந்தகோபாலின் மைத்துனருக்கு உடல்நிலை பாதித்ததாக தகவல் வந்தது. அதன்பேரில் அவர், ராணிப்பேட்டை சென்றார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.