நாமக்கல், மே 27: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் சேகரிக்க தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் அரிசியை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், கழக அரவை முகவர்களை மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. எனவே, ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள், தங்களது விருப்ப கடிதத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.