டூவீலர் திருட்டு

கிருஷ்ணகிரி, மே 27: போச்சம்பள்ளி அடுத்த வாளிப்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (23). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி, தனது டூவீலரை கோபிநாத் மருத்துவமனை முன்பு நிறுத்தியிருந்தார். மாலை வேலை முடிந்து வெளியே வந்து பார்த்த போது, டூவீலர் திருடு போயிருந்தது. இதுகுறித்து கோபிநாத் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: