தாய்,மகன்கள் கொலை வழக்கில் தனிப்படை குற்றவாளியை நெருங்கியது

திருப்பூர்,மே27:திருப்பூருக்கு வேலை தேடி வந்த பெண்,2 மகன்களுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை தனிப்படை போலீசார் நெருங்கி உள்ளனர். திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முத்துமாரி (38). தம்பதியருக்கு தரணிஷ் (9),நித்திஷ் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணேசனை பிரிந்த முத்துமாரி பிழைப்பு தேடி இரு மகன்களுடன் திருப்பூர் வந்தார். பணியிடத்தில் அவருக்கு கோபால் என்பவருடன் தொடர்பு ஏற்படவே வாவிபாளையத்தை அடுத்த சேடர்பாளையம் மெட்டுவா தோட்டத்தில் வசித்து வந்தனர். கடந்த 23ம்தேதி காலை முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்கள் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தனர். அவர்களுடன் தங்கி இருந்த கோபால் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 தனிப்படைகள் அமைத்து கோபாலை போலீசார் தேடி வருகின்றனர்.கொலையான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, முத்துமாரியின் கணவர் கணேசனின் சகோதரி மீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான திருவாரூக்கு 3 உடல்களும் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது. தனிப்படை தற்போது கோபாலின் செல்போன் எண்ணை கொண்டு அவர் பதுங்கியிருந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories: