திருப்பூர்,மே27:திருப்பூருக்கு வேலை தேடி வந்த பெண்,2 மகன்களுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை தனிப்படை போலீசார் நெருங்கி உள்ளனர். திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முத்துமாரி (38). தம்பதியருக்கு தரணிஷ் (9),நித்திஷ் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணேசனை பிரிந்த முத்துமாரி பிழைப்பு தேடி இரு மகன்களுடன் திருப்பூர் வந்தார். பணியிடத்தில் அவருக்கு கோபால் என்பவருடன் தொடர்பு ஏற்படவே வாவிபாளையத்தை அடுத்த சேடர்பாளையம் மெட்டுவா தோட்டத்தில் வசித்து வந்தனர். கடந்த 23ம்தேதி காலை முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்கள் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தனர். அவர்களுடன் தங்கி இருந்த கோபால் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.