ஊட்டி, மே 27:நீலகிரி மாவட்டத்தில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்காக உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில், தொட்டபெட்டா சிகரம் சிறப்பு வாய்ந்த ஒன்று. கிழக்கு தொடர் மலைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமே இந்த தொட்டபெட்டா. இந்தியாவில் உள்ள உயர்ந்த சிகரங்களில் இதுவும் ஒன்று. இதனை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், இங்கு அமைக்கப்பட்ட பைனாகுலர் மூலம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை அழகை மட்டுமின்றி, கர்நாடக மாநில வனங்களையும் காண முடியும். இதற்காகவே, இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொட்டபெட்டா காட்சி முனை நீலகிரி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.