ஈரோடு, மே 27: நம்பியூர், சிஎஸ்ஐ வீதியை சேர்ந்த 17 வயது மாணவி கெடாரை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தேர்வு முடிந்து வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இது குறித்து தந்தை கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், பவானி அடுத்துள்ள சேவண்டியூடிரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 தேர்வு எழுத சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தந்தை கொடுத்த புகாரின் பேரில் பவானி போலீர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.