முட்டம் கடலில் தவறிவிழுந்து சிறுவன் பலி

குளச்சல்,மே 27:  முட்டம் உயரத்தெருவை சேர்ந்தவர் சகாய பிரான்சிஸ். இவரது மகன்  ரோஹித்டோனி (15). இவர் அதே பகுதியை சேர்ந்த ஆன்டனிக்கு சொந்தமான  விசைப்படகில் நேற்று முன்தினம் மீன்பிடித் தொழிலாளர்களுடன் தொழிலுக்கு  சென்றார். உடன் வடமாநில 4 தொழிலாளர்கள் உள்பட 18 தொழிலாளர்கள் சென்றனர்.  படகை பியஸ்(38) என்பவர் ஓட்டினார். படகு முட்டம் மீன்பிடித்  துறைமுகத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் செல்லும்போது  ரோஹித்டோனி வலையை கடலில் வீசினார். அப்போது ரோஹித் டோனி எதிர்ப்பாராமல்  நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்தார். உடனே உடன் சென்ற தொழிலாளர்கள்  தேடும் பணியில் ஈடுப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை ரோஹித்டோனி உடல்  மீட்கப்பட்டது. இது குறித்து படகு  ஓட்டுனர் பியஸ் குளச்சல் மரைன் போலீசில்  புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உடலை  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: