விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடன்

திருச்சி, மே 27: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக் குழு கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன், போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நிலவுடமை தொடர்பான கணினிசிட்டா, பயிர்சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர், அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம். கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தினை பெற்று, ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து, மேற்காணும் ஆவணங்களுடன், மனுவினை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

மேலும் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி மேற்காணும் கடன்களை பெற்று பயனடையலாம். கடன் பெறுவது தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பாக சேவைக் குறைபாடுகள் ஏதும் இருப்பின் தொலைபேசி எண்கள் திருச்சி மண்டல இணைப்பதிவாளர்-7338749300, திருச்சி சரக 7338749303, முசிறி 7338749302, லால்குடி சரக துணைப்பதிவாளர் - 7338749304 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: