திருச்சி, மே 27: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக் குழு கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன், போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நிலவுடமை தொடர்பான கணினிசிட்டா, பயிர்சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர், அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம். கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தினை பெற்று, ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து, மேற்காணும் ஆவணங்களுடன், மனுவினை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.