காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. மாவட்ட தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொருளாளர் எஸ்.குமார், மாவட்ட பொருளாளர் அருளரசி, தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகி சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.