பெரியகுளம், மே 26: பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்த மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்து பேசியதாவது, தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளது. குழந்தைத் திருமணங்களை தடுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கு வரும் சுதந்திர தினத்தன்று சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும் குழந்தை திருமணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்கள் தனிப்பட்ட முறையில் கவுரவிக்கப்படுவார்கள், என்றார்.