வருசநாடு, மே 26: மயிலாடும்பாறை எஸ்ஐ அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று காமன்கல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாறைக்குட்டம் என்ற பகுதியில் கஞ்சா விற்ற காமன்கல்லூரை சேர்ந்த ஆண்டவர் (55), குமணன்தொழுவை சேர்ந்த நடராஜ் (65) ஆகிய இருவரை போலீசார் கை து செய்தனர்.