×

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருமங்கலம், மே 26: திருமங்கலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். திருமங்கலம் கற்பகம் நகரில் ஒரு மறைவான இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் கற்பகம் நகர் பகுதியில் தீவிர சோதனை நடத்திய போது அங்கு மறைவான ஒரு இடத்தில் 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ஆலை அதிபர் வீரபத்திரன்(33), ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து சிந்தாமணிக்கு அரவை கூடத்திற்கு எடுத்து செல்ல வைத்திருந்தது தெரியவந்தது. டவுன் போலீசார் 24 மூட்டைகளை பறிமுதல் செய்து, அரிசி கடத்திய வீரபத்தினையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு