திருப்பரங்குன்றம், மே 26: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வாருவாய் அலுவலர் தலைமையில் நேற்று முன்தினம் முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் திருப்பரங்குன்றம் தாலுகா வாலனேந்தல் கிராமத்தில் பஞ்சமி நிலத்தை பஞ்சமர் அல்லாத தனி நபர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, அந்த பஞ்சமி நிலத்தை மீட்டு தருமாறு விசிக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.