×

அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் கதவு

உசிலம்பட்டி,மே 26: உசிலம்பட்டி அருகேயுள்ள வாலாந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்த கோயிலில் கட்டப்பட்ட ராஜகோபுரத்திற்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட கதவை நாட்டாமங்கலத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மேலும் கொண்டுவரப்பட்ட கதவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மஞ்சள் நீரை தெளித்து கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். பின்னர் ராஜகோபுரத்தில் அந்தக் கதவை பொருத்தி ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Tags : Angala Parameswari ,
× RELATED தெப்ப தேர்த்திருவிழா