மேயர் அஞ்சலி காதல் தகராறில் கத்திக்குத்து மேலும் 2 பேர் கைது

திருப்பூர், மே 26: திருவண்ணாமலையை சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஹரிகிருஷ்ணன்(22). இவர் திருப்பூர் ஆண்டிபாளையம் தனலட்சுமி நகரில் வசிக்கிறார். அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹரிகிருஷ்ணனின் நண்பர் செந்தில் (23) என்பவர், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அதே பெண்ணை முல்லை நகரை சேர்ந்த சக்திவேல் என்ற வாலிபரும் பின்தொடர்ந்து வருவதாக கூறி ஹரிகிருஷ்ணன் மற்றும் செந்தில் ஆகியோர் நேற்று முன்தினம் சக்திவேல் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். பின்னர், சக்திவேல் மற்றும் அவரது சகோதரர் அஜித் மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் செந்திலை தாக்கினர். இதனை பார்த்த ஹரிகிருஷ்ணனின் நண்பரான ராஜ்குமார் இது குறித்து அவர்கைள  தட்டிகேட்டுள்ளார். அப்போது சக்திவேல் தரப்பினர் ராஜ்குமாரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலை இது தொடர்பாக மத்திய போலீசார் முல்லைநகரை சேர்ந்த சக்திவேலை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இந்நிலையில்  இது தொடர்பாக மேலும் ஹரிகிருஷ்ணன் மற்றும் செந்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Related Stories: