விஷவாயு தாக்கிய 2 பேருக்கு தீவிர சிகிச்சை

திருப்பூர், மே 26: பல்லடம் அருகே உள்ள பாச்சாங்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது வீட்டு வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பியது. இந்த தொட்டி நிரம்பியதை தொடர்ந்து திருப்பூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த கழிவுநீர் சுத்தம் செய்யும் லாரி உரிமையாளரான தண்டபானி (60) என்பவரை தொடர்புகொண்டு, கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தி தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து தண்டபானி நேற்று முன்தினம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியான கார்த்திக் (23) என்பவரை அழைத்துக்கொண்டு பாச்சாங்காட்டுபாளையம் வந்தார். தொடர்ந்து இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர்.அப்போது விஷவாயு தாக்கி 2 பேரும் மயக்கமடைந்துள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டபானி மற்றும் கார்த்திக் ஆகியோரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று 2வது நாளாக இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories: