சூலூர்,மே26: சூலூர் தாலூகா அப்பநாய்க்கன்பட்டியில் உள்ளோர் ஆடு வளர்ப்புத் தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் அதிக தொலைவில் உள்ள சூலூர், அல்லது பாப்பம்பட்டிக்கு கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.எனவே அப்பநாய்க்கன்பட்டி பகுதியிலேயே கால்நடை மருத்துவமனை அமைக்க பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.