பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்சி, மே 26: திருச்சி காந்தி மார்க்கெட் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன் மனைவி ஜெயந்தி (50). இவர் இபி ரோட்டில் உள்ள மதுரை மைதானம் அருகே தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென ஜெயந்தி காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடை பறித்து சென்றனர். இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: