கார் உரசுவது போல் சென்றதால் விபத்து லாரி மீது பைக் மோதி எலக்ட்ரீசியன் பலி

திருச்சி, மே 26: திருச்சி பாலக்கரை ஆனந்தபுரம் மாமுண்டி சுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் செபாஸ்டின் மகன் அந்தோணிசாமி (39). எலக்ட்ரீசியன். இவரது நண்பர் வரகனேரியை சேர்ந்த கரிகாலன் (46). இருவரும் நேற்றுமுன்தினம் இரவு திருச்சி- புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு பைக்கில் வந்தனர். பைக்கை கரிகாலன் ஓட்டினார். கொட்டப்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார், பைக்கை உரசுவது போல் சென்றது. இதனால் நிலை தடுமாறிய பைக் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த அந்தோணி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திகா, எஸ்ஐ சிவசாமி ஆகியோர் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விபத்துக்கு காரணமான சென்னையை சேர்ந்த காரை தேடி வருகின்றனர். மேலும் லாரி டிரைவர் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த திருவேங்கடம் (48) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: