சிதம்பரம் வந்த அமைச்சர்களுக்கு நகர்மன்ற தலைவர் உற்சாக வரவேற்பு

சிதம்பரம், மே 26:   சிதம்பரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சிதம்பரம் வந்தனர். அப்போது சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு புறவழிச்சாலை அருகில் அமைச்சர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிதம்பரம் நகர திமுக செயலாளரும், நகர்மன்றத் தலைவருமான கே.ஆர். செந்தில்குமார் அமைச்சர் நேரு மற்றும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு  சால்வை, புத்தகம் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

இதில் சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வின், பொறியாளர் மகாராஜன், நகர்மன்ற கொறடா ஜேம்ஸ் விஜயராகவன், திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், சிதம்பரம் நகர அவைத்தலைவர் ராஜராஜன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, மக்கள் உத்திராபதி, நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன், விஜயா ரமேஷ், பொருளாளர் கிருபாகரன், இளைஞரணி அப்பு சத்தியநாராயணன், மக்கள் அருள், நகராட்சி கவுன்சிலர்கள் மணிகண்டன், தில்லை சரவணன், அசோகன், லதா, கல்பனா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வால்கரைமேடு பாலு, தகவல் தொழில் நுட்ப அணி தர், நகர நிர்வாகிகள் ரமேஷ், ராயர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: