புதிய வகுப்பறை கட்டிட பணி

பண்ருட்டி, மே 26: பண்ருட்டி அருகே வேகாக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரனிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி பெற்று கட்டிடம் கட்டுவதற்கான துவக்கவிழா நேற்று நடந்தது. சபா ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கி கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி ரவிச்சந்திரன், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன், அரசு ஒப்பந்ததாரர் பரமதேவன், பொறியாளர் ஜெய, அவைத்தலைவர் ராஜா, ஊராட்சி செயலர் அன்பழகன், பொறியாளர் அணி சக்திவேல், தகவல் தொழில்நுட்பம் அன்பரசன், விவசாய அணி ஜெயராஜ், கிளை செயலாளர்கள் சண்முகம், பழனி, பன்னீர்செல்வம், துரைமுருகன், அவைத்தலைவர் செல்வராஜ், இளைஞரணி கார்மேகம், இளையராஜா, பிரதிநிதி சம்பந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: