×

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

விருதுநகர், மே 25: விருதுநகரில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் மின்தடை ஏற்பட்டது. இதனால், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. அப்போது குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு தரைத்தளத்தில் உள்ள மின்கலன்கள் வெடித்தன. அதனால் ஏற்பட்ட தீ விபத்தை பார்த்து, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த பெண்கள் தங்கள் கைக் குழந்தைகள், பெற்றோர் என 50க்கும் மேற்பட்டோர் அலறியடித்து மருத்துவமனைக்கு வெளியில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் மின் உபகரணங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வெளியேறிய குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது.


Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...