வ.உ.சி 150வது பிறந்தநாள் நகரும் புகைப்பட கண்காட்சி

விருதுநகர், மே 25: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நகரும் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் நகரும் புகைப்பட கண்காட்சி மே 24 முதல் 26 வரை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவியர் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, பொது மேலாளர் சிவலிங்கம், உதவி இயக்குநர் தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: