×

மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்

விருதுநகர், மே 25: விருதுநகர் அருகே காந்திநகரில் கார்த்திகேயன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டில் சிமிண்ட் அடிப்பதற்கு நேற்று முன்தினம் மணிகண்டன் (21), கருப்பசாமி (29) வேலைக்கு சென்றுள்ளனர். தகர ஷெட் போடப்பட்ட வீட்டின் மேல் 6 அடி உயரத்தில் 33 கேவி உயர்மின் அழுத்த மின்தடப்பாதை சென்றுள்ளது. இந்நிலையில், இருவரும் ஒவ்வொரு பக்கமாக வேலை செய்துள்ளனர். கருப்பசாமி கைப்பிடி சுவரில் தண்ணீர் ஊற்றியபோது, திடீரென மின்சாரம் தாக்கி மேலிருந்து கீழே விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த அவர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மணிகண்டன் புகாரில், ரூரல் போலீசார் வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ