தேனியில் மைனர் கைதி தப்பி ஓட்டம்

தேனி, மே 25: போடி அருகே உள்ள குரங்கனி, புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் குற்றவழக்கில் போடி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் மதுரை சிறுவர்கள் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் 2 சிறுவர்களையும் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று காலை 3 போலீசார் மதுரையில் இருந்து போலீஸ் வேனில் அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் மாலை மீண்டும் மதுரைக்கு வேனில் கொண்டு சென்றனர், தேனி எஸ்பி அலுவலகம் அருகே வந்த போது வேனை நிறுத்திவிட்டு போலீஸ் ஒருவர் எதிரே உள்ள ஹோட்டலுக்கு  சாப்பாடு வாங்க சென்றார். அப்போது வேனுக்குள் இருந்த 17 வயதுடைய கைதியான ஒரு சிறுவன் சிறுநீர் கழிப்பதற்காக கீழே இறங்குவதாக கூறி  அங்கிருந்து தப்பித்து ஓடினான். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து சத்தமிட்டதும் வேனிலிருந்து போலீசார் அச்சிறுவனை விரட்டி பிடித்தனர். பின்னர் அச்சிறுவனை வேனில் ஏற்றி பாதுகாப்புடன் மதுரை கூர்நோக்கு மையத்திற்கு அழைத்து சென்றனர்.

Related Stories: