கடையடைப்பு வாபஸ்

மானாமதுரை, மே 25: மானாமதுரையில் நேற்று நடக்கவிருந்த பஸ் மறியல், கடையடைப்பு வாபஸ் பெறப்பட்டது.மானாமதுரை வைகை ஆற்றில் கல்குறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பல்வேறு கட்சியினர் நேற்று பஸ் மறியல், கடையடைப்பு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட கலெக்டர் போராட்டம் அறிவித்த அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். குவாரி அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும், தடுப்பணை கட்டுவது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து நேற்று கடையடைப்பும், பஸ்மறியலும் வாபஸ் பெறப்பட்டது. கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின.

Related Stories: