×

ஏட்டு மகன் தூக்கிட்டு தற்கொலை

மதுரை, மே 25: மதுரையில் ஏட்டு மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே ஊமச்சிகுளம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் ரகுநாத்(21). இவர் டெல்லியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்து வந்தார். தற்போது, வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் பயின்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரகுநாத்தின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டனர். இவர்கள் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டின் ஒரு அறையில் ரகுநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப்பதிந்து, ரகுநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இவரது தாயார், ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...