முன்னாள் படைவீரர் குறைதீர்ப்பு கூட்டம்

திருப்பூர், மே 25: திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த படையில் பணிபுரியும் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் (பொ)  முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாவட்ட முப்படை வீரர் வாரிய உப தலைவர் கர்னல் ராமகிருஷ்ணன் (ஓய்வு) ஓய்வூதியம் பெறும் முறை குறித்து விளக்கினார்.மாவட்ட கலெக்டர் வினீத் அனைத்துத்துறை மற்றும் வங்கிகளின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக பேசினார். மேலும், கலெக்டர் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து விரைவில் காணுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தவர்களிடம் இருந்து 23 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: