ஊட்டி, மே 25:நீலகிரியில் காலம் தவறி பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அழுகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்பின் மழை குறைந்தே காணப்படும். குறிப்பாக, ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இது போன்ற சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்ய தயக்கம் காட்டுவார்கள்.