செல்போன் திருடிய வாலிபர்கள் 3 பேர் கைது

கோவை,மே 25: கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (21). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்றபோது மர்ம நபர் இருவர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர், அவர்கள் தினேஷ்குமாரிடம் இருந்து அவரின் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி தப்பிச் சென்றனர். இது தொடர்பாக பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போனை திருடியது, கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த அங்குராஜ் (24), மணிகண்டன் (32) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: